» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பதவி உயர்வு : ரூரல் ஏஎஸ்பிக்கு எஸ்பி வாழ்த்து!
புதன் 30, நவம்பர் 2022 5:05:18 PM (IST)
பதவி உயர்வு பெற்றுள்ள தூத்துக்குடி ரூரல் ஏஎஸ்பிக்கு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக காவல்துறையில் 9 அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்று கோயம்புத்தூர் மாநகர வடக்கு காவல்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், பதவி உயர்வு பெற்றுள்ள அவருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.