» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: பைக் பறிமுதல்!

புதன் 30, நவம்பர் 2022 4:10:36 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். 2 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது..

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி நகர காவல் துணை கண்காணிப்பாளர்  சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர் முனியசாமி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில், தாளமுத்துநகர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த மாரி மகன் பாண்டி முனீஸ்வரன் (28) மற்றும் தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்த நைனா முகம்மது மகன் மகேஸ்வரன் (24) ஆகியோர் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 15 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் கத்தி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory