» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

புதன் 30, நவம்பர் 2022 3:08:16 PM (IST)

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த  பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2022-23ம்  கல்வி ஆண்டிற்கான  கல்வி உதவித்தொகை புதியது  (Fresh applications)  விண்ணப்பிப்பதற்கான படிவங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஐஐடி, ஐஐஎம் , ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில்  பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு  பயிலும் மாணவ, மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. குடும்ப  ஆண்டு  வருமானம் ரூ. 2.50 இலட்சத்தற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

நடப்பு 2022-23 ஆம் கல்வி ஆண்டில் புதியது (Fresh applications)  விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவ, மாணவியர்கள் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm #scholarshipschemes என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

மேற்படி நிதியாண்டிற்கான கல்வி கல்வி உதவித்தொகை புதியது விண்ணப்பத்தினை மாணவ/மாணவியர் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் 25.01.2023க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  கல்வி நிறுவனங்கள் சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து, ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம் சென்னை- 5 தொலைபேசி எண்:044-29515942,  மின்னஞ்சல் முகவரி - [email protected] என்ற முகவரிக்கு  விண்ணப்படிவங்களை 31.01.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியுள்ள பிவ/மிபிவ/சீம மாணவ/மாணவியர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory