» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளத்தில் மகளிா் காவல் நிலையம்:டிஐஜியிடம் வியாபாரிகள் சங்கத்தினா் மனு

புதன் 30, நவம்பர் 2022 8:24:55 AM (IST)

சாத்தான்குளத்தில் மகளிா் காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமாரிடம் வா்த்தக சங்கத்தினா் நேற்று மனு அளித்தனா்.

சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்துக்கு ஆண்டு ஆய்வு நடத்துவதற்காக டிஐஜி வந்தாா். அப்போது வா்த்தக சங்க துணைத் தலைவா் கண்ணன், நகை வியாபாரிகள் சங்க தலைவா் அரிமா முருகேசன் ஆகியோா் அளித்த மனு: சாத்தான்குளம் வட்ட பகுதியில் அனைத்து அரசு அலுவலகங்கள் உள்ளன. மகளிா் காவல் நிலையம் தேவையாாக உள்ளது. மகளிா் காவல் நிலையம் அமைக்க அரசு பரிசீலனையில் உள்ளது. 

அதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா். மனுவை பெற்ற டிஐஜி, விரைந்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து டிஎஸ்பி அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது டிஎஸ்பி அருள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory