» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை!

செவ்வாய் 29, நவம்பர் 2022 4:36:05 PM (IST)



நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்றது. 

பிள்ளையன் மனை சேகரத் தலைவர் ஆல்வின் ரஞ்சித்குமார் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி முதல்வர் (பொ) குளோரியம் அருள்ராஜ் வேதபாடம் வாசித்தார். அணைத்து துறைகளைச்  சார்ந்த மாணவ, மாணவிகளும், கல்லூரி பேராசிரியர்களும் சிறப்பு பாடல்களைப் பாடினர். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உபதலைவர் தமிழ் செல்வன் கிறிஸ்து மஸ் சிறப்பு செய்தியை வழங்கினார். திருமண்டல குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் சிறப்பு ஜெபம் செய்தார். 

கல்லூரியில் பயிலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த 30 மாணவ மாணவிகளுக்கு கிறிஸ்மஸ் வெகுமதியை கல்லூரியின் செயலரும், திருமண்டல உயர்நிலை மேல்நிலை பள்ளிகளின் மேலாளருமான எஸ்.பிரேம் குமார் ராஜாசிங்  வழங்கினார். கனோன் ஆர்தர் மர்காஷியஸ் சபைமன்ற தலைவர் வெல்டன் ஜோசப் முடிவு ஜெபம் செய்தார். உபதலைவர் ஆசிகூறினார். 

இவ்விழாவில் திருமண்டல ஆரம்ப பள்ளிகளின் மேலா ளர் ஜேஸ்பர் அற்புதராஜ், திருமண்டல பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், செயற்குழு உறுப்பினர் கள் டேவிட்ராஜ், பிரவின் ஜசக் மற்றும் பெருமன்ற உறுப்பினர்கள் செல்வின், திலகர், ஹரிஸ்ரவி கல்லூரி ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள் மர்காஷியல், ராஜாசிங், எபனேசர், பேராசிரியர் கிருபாகரன் உட்பட ஏராளமா னோர்பங்கேற்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory