» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வடிகால் பணிகளை கனிமொழி எம்பி ஆய்வு

செவ்வாய் 29, நவம்பர் 2022 11:35:34 AM (IST)



தூத்துக்குடியில் வடிகால் பணிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடியில் பெய்த பலத்த மழையால் பழைய மாநகராட்சி அலுவலகம், பாளையங்கோட்டை ரோடு உள்ளிட்ட தாழ்வான இடங்களில் வழக்கம் போல் மழைநீர் தேங்கியது. இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கி கிடந்த பகுதிகளில் கனிமொழி எம்.பி., ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழைநீரை விரைவாக வெளியேற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். மேலும், மழைநீர் வழிந்தோட அமைக்கப்பட்டுள்ள வடிகால்களில் சீராக தண்ணீர் வெளியேறுகிறதா? என்பதையும் அவர் ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி தனசேகர் நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர்ப் பகுதிகளில் நிறைவடைந்துள்ள மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டார். சில இடங்களில் வடிகால்களில் ஏற்பட்டு உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றி தண்ணீர் விரைவாக வழிந்தோட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். அவருடன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory