» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி!

செவ்வாய் 29, நவம்பர் 2022 11:13:42 AM (IST)

கோவில்பட்டி அருகே பைக் விபத்தில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குமரி மாவட்டம் புத்தளம், பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த முருகன் மகன் அஜித் (25). இவர் பெங்களூரில் வேலைக்காக நேர்முக தேர்வுக்கு சென்றார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் இருந்து ஊருக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.‌ இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த போது தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் அஜித் சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory