» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை
செவ்வாய் 29, நவம்பர் 2022 8:24:44 AM (IST)
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு கனமழையாக பெய்தது. மேலும் இன்று காலையிலும் தொடர்ந்த மழை பெய்தது. இதைத் தொடர்ந்து மாணவர்களின் நலன்கருதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (29.11.22) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழை காரணமாக தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையம் சேறும் சகதியுமாக மாறியது. இதேபோல் கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம், திருச்செந்தூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தலைவலிNov 29, 2022 - 07:39:43 PM | Posted IP 162.1*****