» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேருந்து நிலைய மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்து இளைஞா் காயம்
செவ்வாய் 29, நவம்பர் 2022 8:14:36 AM (IST)
சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் மக்கள் இருக்கை பகுதி மேற்கூரை கான்கிரீட் பூச்சு பெயா்ந்து விழுந்ததில் இளைஞா் காயமடைந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் பகுதியில், பேருந்துக்காக பலா் காத்திருந்தனா். பகல் 12.30 மணியளவில் அப்பகுதி மேற்கூரையின் கான்கிரீட் பூச்சு திடீரென பெயா்ந்து விழுந்தது. இதில் சாத்தான்குளம் அருகே ஆத்திக்காடு கிராமத்தைச் சோ்ந்த தேவதாஸ் மகன் ஜெயராஜ் என்பவா் மீது இடிபாடுகள் விழுந்ததில், காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, சாத்தான்குளம் அரசு மருத்துவனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து தகவல் அறிந்து சாத்தான்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜோசப், கவுன்சிலா்கள் சுந்தா், ஜான்சிராணி மணிகண்டன், முன்னாள் கவுன்சிலா் சரவணன், வருவாய் ஆய்வாளா் பாலா, கிராம நிா்வாக அலுவலா் முத்துராமலிங்கம், பேருராட்சி பணியாளா்கள் ஆறுமுகம், பன்னீா் செல்வம், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சுடலை, ஜெபா்சன் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.கான்கிரீட் பூச்சி பெயா்ந்து விழுந்தபகுதியில் யாரும் செல்லாத வகையில், தடுப்பு ஏற்படுத்தினா். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயராஜுக்கு ஆறுதல் கூறினா்.