» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மினிபஸ் மோதி தீக்குச்சி ஆலை டிரைவர் பலி

செவ்வாய் 29, நவம்பர் 2022 8:02:39 AM (IST)

கோவில்பட்டயில் சாலையில் நடந்து சென்றபோது மினிபஸ் மோதி தீக்குச்சி ஆலை டிரைவர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்துள்ள இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் மலையரசன் (43). இவர் தீக்குச்சி ஆலையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி இலுப்பையூரணி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மினி பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சென்று பலியான மலையரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். விபத்து தொடர்பாக மினி பஸ் டிரைவர் குப்பணாபுரத்தைச் சேர்ந்த ராமர் மகன் கதிரேசன் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory