» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாடியில் இருந்து குதித்த பிளஸ்-1 மாணவி தற்கொலை முயற்சி

செவ்வாய் 29, நவம்பர் 2022 7:59:00 AM (IST)

எட்டயபுரத்தில் பள்ளி மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான மாணவி, எட்டயபுரத்தில் உள்ள பள்ளி விடுதியில் தங்கியிருந்து பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவியின் தாயார் நேற்று பள்ளிக்கு சென்று, மாணவியை நன்றாக படிக்குமாறு அறிவுறுத்தினார். இதனால் மனமுடைந்த மாணவி மாலையில் பள்ளியின் முதலாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். 

இதில் பலத்த காயமடைந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory