» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கண்மாயில் மூழ்கிய வாலிபர்: தேடும் பணி தீவிரம்

செவ்வாய் 29, நவம்பர் 2022 7:52:47 AM (IST)

விளாத்திகுளம் அருகே கண்மாயில் மூழ்கிய வாலிபரை 2-வது நாளாக கண்மாயில் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (35). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் தனது நண்பர்கள் 2 பேருடன் அதே பகுதியில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவர் சற்று ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது திடீரென்று தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் 2 பேரும் கண்மாய் தண்ணீரில் நீண்டநேரம் தேடி பார்த்தனர். ஆனால் அவரை பற்றிய தடயம் ஏதும் சிக்கவில்லை. பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விளாத்திகுளம் தீயணைப்பு வீரர்கள் கண்மாய்க்கு விரைந்து வந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் நீந்தி சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஐயப்பன் பற்றிய விவரம் தெரியவில்லை. இரவு நேரமாகி விட்டதால் முதல்நாள் தேடும் பணி நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக கண்மாயில் ஐயப்பனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். மேலும் தூத்துக்குடியில் இருந்து முத்து குளிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு, அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மாலை வரை வரை ஐயப்பன் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவர்களும் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பினர். இது அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory