» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
திங்கள் 28, நவம்பர் 2022 3:26:37 PM (IST)
தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய இயக்குநராக சிவ பிரசாத் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி விமான நிலைய இயக்குநராக பணியாற்றி வந்த சுப்பிரமணியன், புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலைய கட்டுமான பிரிவின் தலைவராக மாற்றப்பட்டார். இதையடுத்து ஆந்திரா மாநிலம் கடப்பா விமான நிலையத்தில் இயக்குனராக பணியாற்றி வந்த சிவபிரசாத் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்படடு தூத்துக்குடி விமான நிலையத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் போதுமேலாளர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ள சிவ பிரசாத் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த 1997ல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியராக பணியில் சேர்ந்தார். 2001 முதல் ஆந்திராவின் அகமதாபாத், ஹைதராபாத், விசாகப்பட்டம், திருச்சி மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் விமான நிலைய இயக்குநராக பணிபுரிந்தார்.