» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் உயரிழப்பு : நண்பர்கள் இருவர் காயம்!

திங்கள் 28, நவம்பர் 2022 11:07:21 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 2பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர், தாய் நகரைச் சேர்ந்த முனியாண்டி மகன் காளியப்பன் (22), இவரது நண்பர்கள் ஸ்டீபன் மகன் வின்சென்ட் (19), சுந்தரலிங்கம் மகன் ஆனந்தவேல் (20) ஆகிய மூவரும் ஒரே பைக்கில் நேற்று குளத்தூர் சென்றுவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தனர். வேப்பலோடை அருகே பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.

இதில் பைக்கில் வந்த மூவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளியப்பன் உயிரிழந்தார். அவரது நண்பர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தருவைகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory