» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி கறிக்கடை ஊழியர் சாவு

திங்கள் 28, நவம்பர் 2022 8:23:32 AM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி கறிக்கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (37). இவர் அந்த பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று, கடையில் பணியில் இருந்த போது, மின்விளக்கு சுவிட்சை ஆன் செய்தாராம். அப்போது எதிர்பாராதவிதமாக பாலமுருகன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உடல் கருகிய பாலமுருகன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory