» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வீடுபுகுந்து 10 பவுன் தங்க நகை திருட்டு - போலீஸ் விசாரணை!
வெள்ளி 25, நவம்பர் 2022 10:48:50 AM (IST)
தூத்துக்குடியில் பட்டப்பகலில் வீடுபுகுந்து 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகி்னறனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம், காந்தி நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகன் ராமநாதன் (61). இவர் நேற்று பிற்பகலில் வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு உறங்கினாராம். அப்போது மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து சூட்கேசில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டாராம். இதன் மதிப்பு ரூ.2.5லட்சம். இதுகுறித்து ராமநாதன் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகரில் நவ.30ம் தேதி மின்தடை!
செவ்வாய் 28, நவம்பர் 2023 10:00:50 PM (IST)

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பசுமாடு பலி!
செவ்வாய் 28, நவம்பர் 2023 9:37:13 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த ரவுடி கைது!
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:50:54 PM (IST)

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறுதானிய, பாரம்பரிய உணவு திருவிழா!
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:18:25 PM (IST)

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:10:47 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் சர்வதேச மகளிருக்கு எதிரான வன்கொடுமை தினம்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 4:34:03 PM (IST)
