» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவன் திடீர் மாயம்: போலீஸ் விசாரணை!

வியாழன் 6, அக்டோபர் 2022 12:11:24 PM (IST)

கோவில்பட்டியில் பள்ளி மாணவன் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் அக்பர். இவரது மகன் இப்ராஹிம் (16), கோவில்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் நடந்த தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் அவரது தந்தை தந்தை திட்டினாராம்.

இதனால் இப்ராஹிம் கடந்த 26 ஆம் தேதி வீட்டை விட்டு சென்றுவிட்டார். அதன் பின்பு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து  அவரது தந்தை, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory