» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதுபழக்கத்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
வியாழன் 6, அக்டோபர் 2022 11:36:43 AM (IST)
வேம்பார் அருகே மதுபழக்கத்தை தந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து காெண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் போத்தி மகன் பேச்சிமுத்து (27). இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த பேச்சிமுத்து நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.