» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குமாரகோயில் பகுதியில் ரூ.29 இலட்சம் சாலைப் பணி : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

புதன் 5, அக்டோபர் 2022 5:38:07 PM (IST)



பத்மநாபுரம் நகராட்சி பகுதியில் ரூ.29 இலட்சம் மதிப்பிலான சாலைப் பணியினை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட, குமாரகோயில் பகுதியில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை சீரமைப்புப்பணியினை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (05.10.2022) துவக்கி வைத்து தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பொதுமக்களின் நலன் கருதி சாலை சீரமைப்பு பணிகள், சாலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றையதினம் ரூ.29 இலட்சம் மதிப்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மீட்பு பணிகள் திட்டத்தின் கீழ் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட குமாரக்கோயில் முதல் மேலங்கோடு வரை சாலை சீரமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இப்பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு  அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், பத்மநாபுரம் நகர்மன்ற தலைவர் அருள்சோபன், கேட்சன், வீர வர்க்கீஸ், அருளானந்த ஜார்ஜ், உதவி பொறியாளர் தனேசேகர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory