» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்பிக் நிறுவனம் சார்பில் நீர்வரத்து ஓடை சீரமைப்பு பணி தொடங்கியது
புதன் 5, அக்டோபர் 2022 4:33:35 PM (IST)
தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனம் சார்பில் நீர்வரத்து ஓடை சீரமைப்பு பணிகள் இன்று தொடங்கியது.
தூத்துக்குடி, முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாய சங்கத்தினர் ஸ்பிக் நிறுவனத்திடம் மழைக்காலத்திற்கு முன் வாய்க்காலை தூர்வாரி தருமாறு கோரிக்கை வைத்தனர். அதன்படி, விவசாய சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, உடனடியாக வாய்க்காலை தூர்வாரி தருவதற்கு ஸ்பிக் நிறுவனத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஸ்பிக் நிறுவன துணைத் தலைவர் கே.கோபால கிருஷ்ணன் உத்தரவின் பேரில், இன்று காலை முதல் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் ஸ்பிக் நிறுவன நிர்வாக முதுநிலை மேலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் மக்கள் தொடர்பு துணை மேலாளர் எம்ஜே அம்ரிதா கௌரி, மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.குணசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், விவசாய சங்கத்தின் சார்பில் முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாய சங்கத் தலைவர் திருமால், செயலாளர் ரகுபதி சின்னராஜா, நிர்வாகி கிருபானந்தம் மற்றும் உப்பாற்று ஓடை ஒருங்கிணைப்பாளர் ரா.ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பணி தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
போதுஜனம்Oct 5, 2022 - 04:51:56 PM | Posted IP 162.1*****