» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிறிஸ்தவ ஆலயத்தில் ஓட்டை பிரித்து நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை!

செவ்வாய் 4, அக்டோபர் 2022 11:07:00 AM (IST)

தட்டார்மடத்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஓட்டைபிரித்து உள்ளே இறங்கி நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம், அண்ணா நகரில் தெய்வச் சகாய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி மர்ம நபர்கள் ஓட்டை பிரித்து உள்ளே சென்று மாதா சொரூபத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 2 பவுன் தங்க செயின், மற்றும் சில்வர் கொடி ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து கிராமகமிட்டி தலைவர் அந்தோணி செல்வம் (61) என்பவர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குருஸ் மிக்கேல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

hrhrhfgOct 4, 2022 - 04:46:45 PM | Posted IP 162.1*****

உள்ளூர் Royal family velyaa irukkum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory