» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசை தசரா திருவிழாவில் 2100 போலீசார் பாதுகாப்பு பணி : எஸ்பி தகவல்

திங்கள் 3, அக்டோபர் 2022 9:30:08 PM (IST)

குலசை தசரா திருவிழாவை முன்னிட்டு 6 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 22 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 83 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்ட அறிவிப்பு: அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 26.09.2022 முதல் 05.10.2022 வரை நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு 04.10.2022 முதல் 06.10.2022 ஆகிய மூன்று நாட்கள் பக்தர்களின் பாதுகாப்பையும் வசதியையும் கருத்தில் கொண்டு கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் உட்பட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

1. அனைத்து வாகனங்களும் அந்ததந்த பகுதியில் இருந்து வரும் தடத்தை பொருத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒருவழிப்பாதையாக தான் கோவிலுக்கு வரவும், அதே போல் ஏற்பாடுகள் செய்துள்ள ஒரு வழிப்பாதையாக தான் திரும்பி செல்ல வேண்டும். 

2. தூத்துக்குடி - திருநெல்வேலி மார்க்கத்திலிருந்து திருச்செந்தூர் வழியாக குலசேகரன்பட்டினம் செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் திருச்செந்தூர் இரும்பு ஆர்ச், மேலரத வீதி, முருகாமடம் சந்திப்பு வழியாக ஆலந்தலை கல்லாமொழி வழியாக குலசேகரன்பட்டினம் கார்த்திகேயன் காம்பளக்ஸ் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு அதே வழித்தடம் வழியாக முருகாமடம் வந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வந்து திருச்செந்தூர் பேருந்து நிலையம் வழியாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப இதில் சில மாறுதல்கள் செய்யப்படும்.

3. திசையன்விளை - தட்டார்மடம் - சாத்தான்குளம் மார்க்கத்தில் இருந்து வரும் அரசு பேருந்துகள் தேரியூர், தேரியூர் ஊருக்குள் வந்து கூழையன்குண்டு விலக்கு வழியாக சத்தியமூர்த்தி பஜார் ஜங்சன், உடன்குடி பேருந்து நிலையம், வில்லிக்குடியிருப்பு சந்திப்பு, குலசை பைபாஸ் சந்திப்பு அருகில் சாலையின் வடக்கு பக்கம் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும். 

4. கன்னியாகுமரி - உவரி மார்க்கமாக வரும் அரசு பேருந்துகள் குலசை நுஊசு சாலையில் உள்ள தீதத்தாபுரம் சந்திப்பு அருகே ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும். 

5. தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக வரும் தனியார் வாகனங்கள் திருச்செந்தூர் இரும்பு ஆர்ச், மேலரத வீதி, முருகாமடம் சந்திப்பு வழியாக பரமன்குறிச்சி தைக்காவூர், சிதம்பரத்தெரு சந்திப்பு, ஆர்.எஸ்.யூ சந்திப்பு உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு வழியாக குலசை ரோடு தருவைகுளம் சந்திப்பு வரை வந்து தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்தி திரும்பி செல்ல குலசை தருவை ரோடு வழியாக திருச்செந்தூர் நுஊசு சாலையில் வந்து முருகாமடம் சந்திப்பு அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள ரோடு வழியாக வந்து திருநெல்வேலி ரோட்டில் ஏறி, திருநெல்வேலி ரோட்டில் இராணிமகராஜபுரம், அடைக்கலாபுரம் அல்லது சண்முகபுரம் இரயில்வே கேட் அல்லது நல்லூர் விலக்கு வழியாக டி.சி.டபிள்யூ சந்திப்பு வந்தடைந்து தூத்துக்குடி செல்ல வேண்டும். 

6. திசையன்விளை, தட்டார்மடம், வழியாக வரும் தனியார் வாகனங்கள் காந்திநகர், படுக்கபத்து காமராஜர் சிலை, எள்ளுவிளை சந்திப்பு , பெரியதாழை சாலை வழியாக மனப்பாடு பாலம் கடந்து பிரியா கேஸ் குடோன் அருகே தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு பின்னர் கொட்டங்காடு சாலை வழியாக நேராக படுக்கபத்து சென்று அங்கிருந்து தட்டார்மடம் , திசையன்விளை ரோடு வழியாக செல்ல வேண்டும்.

7. திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் மணிநகர் பாலம் வழியாக வரும் தனியார் வாகனங்கள் ராமசாமி தர்மபுரம் விலக்கு, கந்தபுரம் விலக்கு, முன்று பனை சந்திப்பு, தீதத்தாபுரம் சந்திப்பு வழியாக பிரியா கேஸ் குடோன் அருகே உள்ள தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு பின்னர் கொட்டங்காடு சாலை வழியாக நேராக படுக்கபத்து சென்று அங்கிருந்து தட்டார்மடம், திசையன்விளை ரோடு வழியாக செல்ல வேண்டும்.

8. சாத்தான்குளம் மார்க்கமாக வரும் தனியார் வாகனங்கள் வேப்பங்காடு, ஆத்திக்காடு, வழியாக ராமகிருஷ்ணா பள்ளி சந்திப்பு, தேரியூர் சந்திப்பு கூழையன்குண்டு சந்திப்பு சத்தியமூர்த்தி பஜார் சந்திப்பு உடன்குடி பேருந்து நிலையம், வில்லிக்குடியிருப்பு சந்திப்பு வழியாக குலசை தருவைகுளம் வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு பின்னர் கொட்டங்காடு சாலை வழியாக நேராக படுக்கபத்து சென்று அங்கிருந்து சாத்தான்குளம், தட்டார்மடம், திசையன்விளை, வள்ளியூர் செல்ல வேண்டும். 

9. கன்னியாகுமரி மார்க்கத்திலிருந்து வரும் தனியார் வாகனங்கள் மணப்பாடு சோதனைச்சாவடி அடுத்து பிரியா கேஸ் குடோன் பின்புறம் உள்ள மற்றும் அருகில் உள்ள தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்தி அதே மார்க்கத்தில் மணப்பாடு வழியாக கன்னியாகுமரி செல்ல வேண்டும். 

10. திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கத்திலிருந்து வரும் தனியார் வாகனங்கள் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரிக்கு அடுத்த காந்திபுரம் விலக்கு வழியாக காயாமொழி வந்து பரமன்குறிச்சி உடன்குடி பேருந்து நிலையம், வில்லிக்குடியிருப்பு சந்திப்பு வழியாக குலசை ரோடு தருவைகுளம் சந்திப்பு தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு பின்னர் திருச்செந்தூர் நுஊசு சாலை வந்து முருகா மடம் சந்திப்பு, அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும். 

11. குலசை கடலோர காவல் சோதனை சாவடி செட்டியாபத்து ரோடு கூழையன்குண்டு விலக்கு மற்றும் சல்மா பள்ளி உடன்குடி ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களுடன் தற்காலிக காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணித்தும் திறந்த வாகனங்கள் அசாதாரண சூழலில் ஆட்களையோ - பக்தர்களையோ ஏற்றி வந்தால் அந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது சட்டபடியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

12. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்ற உலோத்திலான எந்த பொருட்களையும் கொண்டு வருவதோ ஜாதி சின்னங்களுடன் கொடியோ, உடைகளோ, தொப்பி, ரிப்பன்கள் ஆகியவற்றை அணிந்து வரவோ காவல்துறையினரை போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ, அறுவறுக்க தக்க வகையில் நடந்து கொண்டாலோ நடனம் ஆடினாலோ அதிக சத்தத்துடன் டிரம்ஸ் அடித்து ஒலி எழுப்பி சுற்று சூழலுக்கு பங்கம் ஏற்படுத்தினாலோ, ஜாதி சம்பந்தமான கோஷங்கள் மற்றும் இசை ஏற்படுத்தவோ அனுமதியில்லை. என்பதை தெரிவித்து கொள்வதுடன் மீறினால் சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

13. கோவில் மற்றும் கோவில் சுற்றியுள்ள பகுதியில் கடற்கரை வாகன நிறுத்தங்கள் சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களில் மறைவாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவைகளின் மூலம் பக்தர்கள் வடிவில் வரும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் நடவடிக்கைகளை கண்காணிப்பு கேமரா மூலம் பார்வையிட்டு தேவைப்பட்டால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

14. பாதுகாப்பு மற்றும் திருட்டு நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வர கடற்கரை வாகன நிறுத்தங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டதுடன் இந்த வருடம் மக்கள் வாகனங்களில் இருந்து இறங்கி குழுக்களாக கடற்கரை சென்று கோவில் வந்து திரும்பி அவரவர் வாகனங்களில் செல்லும் இடம் வரை காவலர்கள் கண்காணிக்கும் விதமாக சீருடை மற்றும் சாதராண உடைகள் அணிந்த பெண் மற்றும் ஆண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். 

15. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அல்லது இதர சிறு வியாபாரிகள் உரிய அனுமதியின்றி சாலையோர சட்டவிரோதமாக கடைகள் அமைப்பதோ வேறுவிதமாக போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக வாகனங்கள் தேக்க தன்மையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

16. காவல்துறை முன் அனுமதியின்றி திருவிழா சம்பந்தமாக கோவில் பகுதிகள் மற்றும் எந்த தனியார் அல்லது பொது இடத்திலும் ஒலி பெருக்கி பயன்படுத்தவோ ஆடல் பாடல் போன்ற இசை நிகழ்ச்சிகளோ எவ்வித கலைநிகழ்ச்சிகள் நடத்தவோ, இராட்டினங்கள் அமைத்து தொழில் செய்யவோ எவருக்கும் அனுமதியில்லை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

17. பக்தர்களை ஏற்றி வரும் தனியார் வாகன ஒட்டிகள் தற்காலிக வாகன நிறுத்தத்தில் ஏனோ தானோ என்று வாகனத்தை நிறுத்தாமலும் வாகனத்தை சுற்றி கொட்டகை அமைக்காமலும் ஒழுங்காக நிறுத்தி மற்ற வாகனங்கள் வந்து செல்ல இடமளித்து நிறுத்த வேண்டும். காவல்துறை உத்தரவுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். 

18. பக்தர்களை ஏற்றிவரும் தனியார் வாகன ஒட்டிகள் அந்ததந்த பகுதியிலிருந்து வரும் தனியார் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனியார் வாகன நிறுத்தங்களில் நிறுத்தாமல் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக கோவில் வளாகம் மற்றும் மற்ற பகுதிகளில் சாலை ஒரங்களில் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

19. பக்தர்கள் தசரா குழுக்களாக வந்து முக்கிய சந்திப்புகளை கடக்கும் போது அவ்விடத்தில் அதிக நேரத்தில் நிறுத்தி கொண்டு வாண வேடிக்கைகள் நடத்தவோ, நன்கொடை பெறவோ இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டோ மற்ற பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

20. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு வழிப்பாதையாக உடன்குடி குலசை பைபாஸ் சந்திப்பு அருகில் உள்ள இரத்தினகாளியம்மன் கோவில் எதிரே திருவருள்பள்ளி தெரு வழியாக காவலர் குடியிருப்பு அரசு ஆரம்ப சுகாதார மையம் வழியாக கோவில் முன்பகுதி வந்து கடற்கரைக்கு செல்லவோ, தரிசனத்திற்கு செல்லவோ வேண்டும். 

21. கோவிலுக்கு வரும் தசரா குழுக்கள் ஒரு வழிப்பாதையாக உடன்குடி குலசை பைபாஸ் கருங்காளியம்மன் கோவில் சந்திப்பு வழியாக தாயம்மாள் பள்ளி சந்திப்பு வழியாக நேராக கோவில் முன்பகுதி மடப்பள்ளி வந்து கடற்கரைக்கு செல்ல வேண்டும். 

22. கோவில் தரிசனம் முடிந்து வருபவர்கள் கோவில் மேற்குபக்க வாசல் (ஆர்ச்) வழியாக வெளியே வந்து காவல்நிலையம் முன்பு வந்து நேராக குலசை வுழ உடன்குடி பைபாஸ் சந்திப்பு வந்து தங்கள் வாகன நிறுத்தங்களுக்கு செல்ல வேண்டும். 

23. கடற்கரையில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் ஒருவழிப்பாதையாக சிதம்பரஸ்வரர் கோவில் தெரு, கச்சேரி தெரு வழியாக காவல் நிலையம் முன்பு வந்து உடன்குடி பைபாஸ் சந்திப்பு செல்ல வேண்டும். 

24. பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டி தசரா குழு பக்தர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கோவிலில் காப்பு கயிறுகளை அவிழ்த்து கொள்ளலாம். 

25. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிராகரம் கோவில் வளாகத்தில் எந்தவித ஆடல் பாடல் நிகழ்ச்சிகளோ, ஆபாச நடனமோ நடத்தக் கூடாது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த திருவிழாவை முன்னிட்டு 6 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 22 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 83 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

காவல்துறையால் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலை மற்றும் நியாயமான தேவைகளுக்காகவும் பக்தர்களின் பொதுநலனுக்காகவும் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்களும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

NameOct 4, 2022 - 02:00:41 PM | Posted IP 162.1*****

Thirunanhai kottam jasthiya iruku avangala control panunga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory