» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போதைப்பொருள் விற்பனை, கடத்தல் குறித்து புகார் அளிக்க செல்போன் எண்கள் : எஸ்பி அறிவிப்பு
வெள்ளி 30, செப்டம்பர் 2022 3:16:57 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க காவல்துறை சார்பில் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவதே காவல் துறையின் நோக்கமாகும். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் காவல்துறைக்கு தேவைப்படுகிறது.
ஆகவே பொதுமக்கள் சமுதாயத்தின் மீது அக்கறையுணர்வுடன் தங்கள் பகுதிகளிலோ, பள்ளி மற்றும் கல்லூரி அருகிலோ, கடைகள் போன்ற பொது இடங்களிலோ கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற தகவல் தெரிந்தால் செல்போன் எண்கள் 83000 14567 மற்றும் 95141 44100 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவலாகவோ அல்லது வாட்ஸ் தகவலாகவோ 24 மணிநேரமும் தெரிவிக்கலாம் எனவும், குறிப்பாக அவ்வாறு தகவல் தருபவர்கள் விபரம் ரகசியமாக வைக்கப்படும்" என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
அன்புSep 30, 2022 - 07:52:34 PM | Posted IP 162.1*****
பூங்காக்களில் கஞ்சா அடிக்கிறவனை போன்போட்டா தூக்கமாட்டீங்களா
billaOct 1, 2022 - 06:56:21 PM | Posted IP 162.1*****