» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடன் பிரச்சனையில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை : தூத்துக்குடி அருகே பரிதாபம்!
வியாழன் 29, செப்டம்பர் 2022 10:33:31 AM (IST)
தூத்துக்குடி அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தியில் தீக்குளித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தரார்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள பட்டாண்டி விளை கிராமம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் மகன் ரமேஷ் (43). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரிடம் கடன் வாங்கினாராம். ஆனால் கடனை திருப்பி செலுத்தாததால் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி அளித்தாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையடைந்த ரமேஷ் நேற்று பெயிண்டுடன் கலக்கும் தின்னரை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டாராம். இதில் உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.