» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!
வியாழன் 29, செப்டம்பர் 2022 10:18:48 AM (IST)
கோவில்பட்டி அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கொம்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து மகன் கருப்புசாமி (40). கூலித் தொழிலாளி. இவர் தினசரி குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்வாராம். இதனால் மனைவி அவரிடம் கோபித்துக்கொண்டு தனது அக்கா வீட்டுக்கு சென்று விட்டாராம்.
மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் இருந்த கருப்பசாமி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.