» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!

வியாழன் 29, செப்டம்பர் 2022 10:18:48 AM (IST)

கோவில்பட்டி அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கொம்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து மகன் கருப்புசாமி (40). கூலித் தொழிலாளி. இவர் தினசரி குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்வாராம். இதனால் மனைவி அவரிடம் கோபித்துக்கொண்டு தனது அக்கா வீட்டுக்கு சென்று விட்டாராம். 

மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் இருந்த கருப்பசாமி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory