» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது மினி லாரி மோதி விபத்து : விவசாயி பலி

வியாழன் 29, செப்டம்பர் 2022 10:12:34 AM (IST)

விளாத்திகுளம் அருபே பைக் மீது மினி லாரி மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள லக்கம்பட்டி கிராமம் சேர்ந்தவர் சடையாண்டி மகன் பாலமுருகன் (48). விவசாயி, இவர் நேற்று விளாத்திகுளத்தில் இருந்து சூரங்குடி செல்லும் ரோட்டில் தனது பைக்கில் வேலாயுதபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒரு மினி லாரி இவரது பைக் மீது மோதியது. 

இதில் பலத்த காயம் அடைந்த அவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இளவரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் சூரங்குடியை சேர்ந்த கருப்பசாமி மகன் சின்னசாமி (40) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory