» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய திட்டங்கள்: 30ம் தேதி மத்திய அமைச்சர் தொடங்கி வைக்கிறார்!
புதன் 28, செப்டம்பர் 2022 5:09:52 PM (IST)
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வருகிற 30ம் தேதி பல்வேறு திட்டப் பணிகளை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தொடங்கி வைக்கிறார்.
நாளை மறுநாள் காலை விமானம் மூலம் வருகை தரும் அவர் தூத்துக்குடி துறைமுகத்தில் நிலையான தீயணைப்பு கருவிகள், நிலக்கரி தளம், இ-கார் சேவைகள், தகவல் தொழில்நுட்ப மேம்பாடு, மின் போக்குவரத்து திட்ட மேம்பாடு, 140 கிலோ சூரிய மெயின் திட்டம், ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் ஆயுஷ் பிரிவு உள்ளிட்ட திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
மேலும், தூத்துக்குடி கடலோர விரைவான வேலை வாய்ப்பு திட்டம், இரண்டு மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், 400 கிலோ வாட் சூரிய ஒளி மின் திட்டம் போன்றவற்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து வ.உ. சிதம்பரனார் நினைவு அருங்காட்சியகம், மற்றும்வ.உ. தகவல் மையம் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.