» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்ப பிரச்சனையில் உறவினரை தாக்கியவர் கைது
புதன் 28, செப்டம்பர் 2022 3:40:07 PM (IST)
எப்போதும்வென்றான் அருகே குடும்ப பிரச்சனையில் உறவினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகேயுள்ள ஆதனூர் பகுதியை சேர்ந்த செல்லகிருஷ்ணன் மகன் சிவக்குமார் (24) என்பவருக்கும் அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த உடையார் மகன் சுடலை (40) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று சிவக்குமார் அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சுடலை அவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர பாண்டியன் வழக்குபதிவு செய்து எதிரி சுடலையை கைது செய்தார். அவர் மீது ஏற்கனவே எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
sddssSep 28, 2022 - 11:51:18 PM | Posted IP 162.1*****