» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புகையிலை பாக்கெட்டுகளை கடத்தியவர் கைது : இருசக்கர வாகனம் பறிமுதல்
செவ்வாய் 27, செப்டம்பர் 2022 8:55:11 AM (IST)
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பைக்கில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர்சுகுமார் மற்றும் போலீசார் நேற்று கோவில்பட்டி மந்திதோப்பு கணேஷ்நகர் ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் கோவில்பட்டி மந்திதோப்பு கணேஷ்நகர் பகுதியைச் சேர்ந்த மூக்கையா மகன் தங்கவேல் (41) என்பர் இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் தங்கவேலை கைது செய்து அவரிடமிருந்த 969 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.