» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஜக கொடியை சேதப்படுத்தியதாக 3 போ் கைது

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 8:21:50 AM (IST)

கோவில்பட்டியில் பாஜக கொடியை சேதப்படுத்தியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் வேல்ராஜா(32), அக்கட்சியைச் சோ்ந்த புதுகிராமம் வசந்த நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த குருநாதன் ஆகியோா் அங்குள்ள கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவைப் பாா்த்துக் கொண்டிருந்தனராம். அப்போது பிரதான சாலையில் உள்ள கம்பத்திலிருந்த பாஜக கொடியை 3 போ் சேதப்படுத்தியதாகவும், அவா்களைக் கண்டித்த வேல்ராஜா, குருநாதன் ஆகியோருக்கு அந்த 3பேரும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வேல்ராஜா அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சிந்தாமணி நகா் 1ஆவது தெரு ராமச்சந்திரன் மகன் காா்த்திக் என்ற சென்டிரிங் காா்த்திக் (28), செண்பகா நகா் 1ஆவது தெரு கணேசமூா்த்தி மகன் லட்சுமணன் (22), புதுகிராமம் 6ஆவது தெரு பரமராஜ் மகன் நாகராஜ் (21) ஆகிய 3 பேரையும் நேற்று  கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory