» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சோலார் மின் நிலையத்தில் காப்பர் திருட்டு; 4 பேர் கைது

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 8:18:17 AM (IST)

தூத்துக்குடி அருகே சோலார் மின்உற்பத்தி நிலையத்தில் தாமிர கம்பி திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா பசுவந்தனை முள்ளுபட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சோலார் மின் நிலையத்தில் கடந்த 23-ந்தேதி தாமிர கம்பிகள் திருட்டு போனது. இதுகுறித்து பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிவு செய்து க்ீழமுடிமன் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் பாலமுருகன் (27) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் கீழமுடிமன் மயில்வாகனம் மகன் அழகுசுந்தரராஜ் (23), மேலமங்கலம் சுப்பையா மகன் செல்வகணேசன் (22), கீழமங்கலம் கணேசன் மகன் மூர்த்தி (20) ஆகியோருடன் சேர்ந்து சோலார் மின் நிலையத்தில் தாமிர கம்பிகளை திருடியது தெரியவந்தது. மேலும், இவர்கள் தாமிர கம்பிகளை உருக்கி தூத்துக்குடியில் உள்ள இரும்பு கடையில் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.28 ஆயிரத்து 800 மதிப்பிலான தாமிர கம்பி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory