» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கலவரத்தை ஏற்படுத்தும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி கோரிக்கை!
திங்கள் 26, செப்டம்பர் 2022 11:53:58 AM (IST)
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு மூலம் கலவரத்தை ஏற்படுத்தும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு: தேசிய புலனாய்வு முகமை (NIA) பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீதான பல்வேறு வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை தமிழகம், கேரளா, ஆந்திரா உட்பட 15 மாநிலங்களில் சோதனை நடத்தி 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதன் விளைவாக தமிழகம் முழுவதும் ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றனர். மண்டைக்காடு மற்றும் கோவை கலவரங்கள் போன்றவற்றை மீண்டும் நிகழ்த்திட முனைகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆகவே தமிழக அரசு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க துடிக்கும் பிஎச்ஐ, எஸ்டிபிஐ அமைப்பின் நிர்வாகிகளை கைது செய்திட வேண்டியும், தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக தேச விரோத செயலுக்கு ஆயுத பயிற்சி முகாம் நடத்துவது, ஆட்கள் சேர்ப்பது, கலவரங்கள் நடத்த நிதியுதவி செய்வது போன்ற பல்வேறு வழக்குகளை கொண்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா போன்ற அமைப்புகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் சார்பாக கோரிக்கை மனு அளித்தனர்.
மக்கள் கருத்து
ராமநாதபூபதிSep 26, 2022 - 05:11:00 PM | Posted IP 162.1*****
என்னது இவங்களை இவங்களே தடை பண்ண சொல்றாங்க
arunSep 26, 2022 - 04:22:14 PM | Posted IP 162.1*****
You are the only problem to the entire Tamil Nadu
ORE INAMSep 26, 2022 - 04:21:05 PM | Posted IP 162.1*****
நியாயமான கோரிக்கை. தங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
rahimSep 26, 2022 - 03:16:35 PM | Posted IP 162.1*****
veesurathey neenga thaan da
PODHU JANAMSep 27, 2022 - 09:11:09 AM | Posted IP 162.1*****