» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாதை பிரச்சினையில் அ.ம.மு.க. பிரமுகர் கொலை: வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு!

ஞாயிறு 25, செப்டம்பர் 2022 6:09:13 PM (IST)

காயல்பட்டினத்தில் பாதை பிரச்சினையில் தாக்கப்பட்ட அமமுக பிரமுகர் உயிரிழந்தார். இது தொடர்பாக கொலை வழக்குப் பதிந்து வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஹாஜி அப்பா தைக்கா தெருவை சேர்ந்தவர் நைனா முகமது (56). அ.ம.மு.க. பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு செய்யது அகமது பாத்திமா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். நைனா முகமதுவின் தாய் தனி வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த அபுல் ஹாசன் மகன் நவ்பள் (26) என்பவரது வீட்டிற்கும் இடையில் முடுக்கு பாதை சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி காலையில் நைனா முகமதுவின் தாய் வீட்டின் ஒரு பகுதியை நவ்பள் இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கேள்விப்பட்டு நைனா முகமது அங்கு சென்றுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த நவ்பள், நைனா முகமதுவை அடித்து உதைத்துள்ளார். இதில் நெஞ்சில் பலத்த அடிபட்டு நைனா முகமது நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலையில் பரிதாபமாக இருந்தார். இச்சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிந்து நவ்பளை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து

ammkSep 25, 2022 - 09:00:45 PM | Posted IP 162.1*****

Is a criminal katchi

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory