» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எனது படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இருக்கும் : நடிகர் வடிவேலு பேட்டி
வெள்ளி 23, செப்டம்பர் 2022 4:33:44 PM (IST)

"தற்போது நான் நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்" என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்வதற்கு நேற்று இரவு வந்தார். அவர் கோயிலுக்கு சென்று மூலவர், சண்முகர், பெருமாள் உள்ளிட்ட சன்னதிகளில் வழிபட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "நான் தற்போது நாய் சேகர், ரிட்டன், மாமன்னன். சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இயக்குனர் மாரி செல்வராஜ் திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளேன்.
உடல்நலம் குறைவால் இருக்கும் நடிகர் போண்டாமணிக்கு இயன்ற உதவியை செய்வேன். என்னோடு தொடர்ந்து நடித்த துணை நடிகர்களுக்கான காமெடி டிராக் தற்போது இல்லாததால் முன்பு போல் அவர்களுடன் சேர்ந்து நடிக்க இயலவில்லை. தற்போது நான் நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாகவே இருக்கும். நாய் சேகர், ரிட்டன் படத்தில் பாடல்கள் பாடி உள்ளேன். அப்பாடல்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும்" இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் 3 பைக் திருட்டு : வாலிபர் கைது!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:12:06 AM (IST)

கார் மோதி முதியவர் பலி: டிரைவர் கைது
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:05:01 AM (IST)

தூத்துக்குடியில் காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:41:27 AM (IST)

தமிழ்நாட்டில் அனைத்து அதிகாரங்களும் ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ளது: கிருஷ்ணசாமி
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:15:10 AM (IST)

பைக்கை சேதப்படுத்தி, வாலிபரை தாக்கிய 2பேர் கைது!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:12:19 AM (IST)

பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:08:47 AM (IST)
