» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கனல் கண்ணன் கைது: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:32:51 AM (IST)
இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சினிமா சண்டை பயிற்சியாளர், இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் கனல் கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து தூத்துக்குடி மாநகர் இந்து முன்னணியின் சார்பாக தாளமுத்து நகர் மெயின் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சிபு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் இசக்கி முத்து குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் ராகவேந்திரா, சரவணகுமார், நாராயண ராஜ், பலவேசம், மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
OOPSAug 16, 2022 - 01:06:12 PM | Posted IP 162.1*****
உங்களுக்கு அறிவே இல்லையா? உன்னை அடிமையா வைத்திருந்த, தன்னை மேல் ஜாதி என்று எண்ணினவர்களுக்கு எதிராக போராடிய தந்தை பெரியார் உனக்கு எதிரியா? மீண்டும் அடிமையாய் வாழ விரும்புகிறாயா? சற்று சிந்தியுங்கள்.
mutta pasangaAug 17, 2022 - 10:11:36 AM | Posted IP 162.1*****