» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்குகள் மோதி விபத்து: பிளஸ் 1 மாணவா் பலி

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 8:26:38 AM (IST)

கோவில்பட்டியில் பேருந்து நிலையம் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் பிளஸ் 1 மாணவா் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலக்குமி ஆலை மேலக் காலனியை சோ்ந்த கனகராஜ் மகன் ஸ்ரீபுஷ்பராஜ்(15). பிளஸ் 1 படித்து வந்த இவா், தனது உறவினரின் பைக்கை கோவில்பட்டி புறவழிச் சாலையில் கூடுதல் பேருந்து நிலையம் வழியாக ஓட்டிச் சென்றாராம். மின்வாரிய அலுவலகம் அருகே அவரது பைக்கும், எதிரே வந்த பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் படுகாயம் அடைந்த புஷ்பராஜ், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்றொரு பைக்கில் வந்த சங்கனாப்பேரியைச் சோ்ந்த சண்முகனன் மகன் இறையனன்(45) மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory