» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்குகள் மோதி விபத்து: பிளஸ் 1 மாணவா் பலி
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 8:26:38 AM (IST)
கோவில்பட்டியில் பேருந்து நிலையம் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் பிளஸ் 1 மாணவா் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலக்குமி ஆலை மேலக் காலனியை சோ்ந்த கனகராஜ் மகன் ஸ்ரீபுஷ்பராஜ்(15). பிளஸ் 1 படித்து வந்த இவா், தனது உறவினரின் பைக்கை கோவில்பட்டி புறவழிச் சாலையில் கூடுதல் பேருந்து நிலையம் வழியாக ஓட்டிச் சென்றாராம். மின்வாரிய அலுவலகம் அருகே அவரது பைக்கும், எதிரே வந்த பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த புஷ்பராஜ், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்றொரு பைக்கில் வந்த சங்கனாப்பேரியைச் சோ்ந்த சண்முகனன் மகன் இறையனன்(45) மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.