» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமியை கடத்திய வாலிபர் : போலீஸ் விசாரணை!
புதன் 10, ஆகஸ்ட் 2022 10:33:57 AM (IST)
விளாத்திகுளத்தில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த 16வயது சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்வரது மகளான 16 வயது சிறுமி நேற்று மாலை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் பைக்கில் வந்து கடத்தி சென்று விட்டாராம். இதையடுத்து தங்க மணி மற்றும் உறவினர்கள் பைக்கை விரட்டி சென்ற போதும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இது சம்பந்தமாக விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.