» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர் வாகனம் உடைப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 8:48:52 PM (IST)
தூத்துக்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி சகாயமாதா பட்டிணத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தமிழக காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட ஜீப்பை மாதவன் நாயர் காலனியில் உள்ள தனது வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார்.
நேற்று இரவு மர்ம ஆசாமிகள் அந்த ஜீப் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். அந்த வாகனத்தின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது. இது குறித்து தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.