» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர் வாகனம் உடைப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 8:48:52 PM (IST)

தூத்துக்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி சகாயமாதா பட்டிணத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தமிழக காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட ஜீப்பை மாதவன் நாயர் காலனியில் உள்ள தனது வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார். 

நேற்று இரவு மர்ம ஆசாமிகள் அந்த ஜீப் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். அந்த வாகனத்தின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது. இது குறித்து தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory