» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை: போலீஸ் விசாரணை
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 4:23:27 PM (IST)
திருச்செந்தூரில் ரயில் முன் பாய்ந்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென்று ரயில் முன்பு பாய்ந்தார். ரயில் மோதியதில் அவரது தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. கட்டம் போட்ட சட்டையும், கைலியும் அணிந்திருந்தார். இந்த சம்பவம் குறித்து நெல்லை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.