» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை: போலீஸ் விசாரணை

செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 4:23:27 PM (IST)

திருச்செந்தூரில் ரயில் முன் பாய்ந்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென்று ரயில் முன்பு பாய்ந்தார். ரயில் மோதியதில் அவரது தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி  பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. கட்டம் போட்ட சட்டையும், கைலியும் அணிந்திருந்தார். இந்த சம்பவம் குறித்து நெல்லை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory