» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 11:42:00 AM (IST)

தட்டார்மடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை கிராமத்தைச் சேர்ந்தவர் கனி மகன் ஜோசப் அந்தோணி (50), இவர் கடந்த 4ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அந்த கிராமத்தில் உள்ள சர்ச்க்கு சென்றார். சுமார் 2 மணி நேரம் கழித்து திரும்பி வந்தபோது வீட்டின் கதவில் உள்ள பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோசப் அந்தோணி குடும்பத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 7 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் ஜோசப் அந்தோணி செய்தார். புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory