» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை திருடிய 3பேர் கைது
வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 9:09:10 PM (IST)
விளாத்திகுளம் அருகே நெடுஞ்சாலையில் எச்சரிக்கைபலகை திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம் - தூத்துக்குடி செல்லும் சாலையில், நெடுஞ்சாலை துறையின் சார்பில், விபத்து பகுதி மற்றும் வளைவு பகுதிகளில் முன்னெச்சரிக்கை இரும்பு பலகைகள் மற்றும் பிரதிபலிப்பான் இரும்பு பலகைகள் வைக்கப்பட்டு பராமரிப்பு மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்திற்கும் - மீனாட்சிபுரம் கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த 10 எச்சரிக்கை இரும்பு பலகைகள் மற்றும் 11 பிரதிபலிப்பாக இரும்பு பலகைகள் திருட்டப்பட்டது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் ஆதியப்பன் கொடுத்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் நேற்று இரவு இந்த இரும்பு பலகைகளை திருடிய வேம்பாரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் அந்தோணி ஜேம்ஸ் (வயது 25), நரிப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிமுத்து மகன் கருப்பசாமி (42) மற்றும் ராமசாமி மகன் ஆத்தி (42) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இத்திருட்டுக்கு பயன்படுத்திய மினிவேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துனை நிலையத்தில் ரூ.1.68 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:58:22 AM (IST)

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:31:01 AM (IST)

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி : ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:21:55 AM (IST)

கனல் கண்ணன் கைது: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:32:51 AM (IST)

தூத்துக்குடியில் விதிகளை மீறும் கனரக வாகனங்கள்; போக்குவரத்து நெரிசல் - மாணவர்கள், பொதுமக்கள் அவதி
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:14:18 AM (IST)

தூத்துக்குடி மக்களை கவர்ந்த விருதுநகர் ஃபேமஸ் பெஞ்ச்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 9:58:49 AM (IST)
