» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கனமழையில் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி காயம் : நிவாரண உதவி வழங்கல்!
வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 5:01:49 PM (IST)

செய்துங்கநல்லூரில் கனமழையினால் வீடு இடிந்து காயம் அடைந்த மூதாட்டிக்கு ஆட்சியர் அறிவுறுத்தலின்படி நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், செய்துங்கநல்லூர் முஸ்லிம் புது தெருவில் கேத்திர பாலன்மனைவி மீனாட்சி என்ற மூதாட்டி மட்டப்பா வீட்டில் வசித்து வருகிறார். செய்துங்கநல்லூர் பகுதியில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. அதிகாலை 3.20 மணியளவில், மீனாட்சியின் மட்டப்பா வீடு சேதமடைந்துள்ளது. சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்த மீனாட்சியின் தலைமேல் விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், திருவைகுண்டம் வட்டாட்சியரை தொடர்பு கொண்டு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண உதவி திட்டத்தின் கீழ் நிவாரண உதவித்தொகை மற்றும் தனது சார்பாக மூதாட்டிக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கிடுமாறு அறிவுறுத்தினார். அதனடிப்படையில், மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண உதவி திட்டத்தின் கீழ் ரூ.5ஆயிரம் மற்றும் மளிகை பொருட்களை திருவைகுண்டம் வட்டாட்சியர் இராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் : தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 12:24:37 PM (IST)

லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 500 கிலோ குட்கா பறிமுதல் : தூத்துக்குடியில் 3பேர் சிக்கினர்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 12:16:39 PM (IST)

துனை நிலையத்தில் ரூ.1.68 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:58:22 AM (IST)

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:31:01 AM (IST)

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி : ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:21:55 AM (IST)

கனல் கண்ணன் கைது: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:32:51 AM (IST)
