» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது : இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 3:46:47 PM (IST)
குரும்பூர் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 37 மதுபாட்டில்கள், மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று குரும்பூர் யோகரத்தினம் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் நாசரேத் நல்லான்விளை பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் வேல்குமார் (49) மற்றும் நாலுமாவடியை சேர்ந்த ராமசுந்தரம் மகன் பொன்ராஜ் (51) ஆகிய இருவரும் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 37 மதுபாட்டில்கள், ரொக்க பணம் ரூ.2,950, மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் : தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 12:24:37 PM (IST)

லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 500 கிலோ குட்கா பறிமுதல் : தூத்துக்குடியில் 3பேர் சிக்கினர்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 12:16:39 PM (IST)

துனை நிலையத்தில் ரூ.1.68 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:58:22 AM (IST)

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:31:01 AM (IST)

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி : ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:21:55 AM (IST)

கனல் கண்ணன் கைது: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:32:51 AM (IST)
