» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதான இன்ஜினியர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி!
வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 11:56:40 AM (IST)
ஆன்லைன் மூலம் ரூ.100 கோடி மோசடி செய்த புகாரில் கைதான குமரியை சேர்ந்த இன்ஜினியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இத்தகைய ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை இழந்த பலர் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவமும் நடந்துள்ளன. இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசாரும் துரித நடவடிக்கை எடுப்பதோடு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இத்தகைய மோசடிகள் குறைந்தபாடில்லை.
இந்தநிலையில் மலேசியா நாட்டை தலைமையிடமாக கொண்டு மும்பையை சேர்ந்த ராஜா என்பவர் தலைமையில் ஒரு கும்பல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆட்கள் தேவை என ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்துள்ளார்கள். இதற்கு விண்ணப்பித்த ஏராளமானோரிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அந்த கும்பல் ஏராளமாக செல்போன் சிம்கார்டு எண்களையும் உபயோகித்துள்ளனர்.
இந்த மோசடியில் குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த இன்ஜினியர் பிரின்ஸ் ஜெரோம் (30) என்பவருக்கு தொடர்பு இருப்பதை மும்பை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் பிரின்ஸ் ஜெரோம் சொந்த ஊரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே மும்பை சைபர் கிரைம் போலீசார் நேற்றுமுன்தினம் குமரி மாவட்டத்துக்கு வந்தனர். அவர்கள் பூதப்பாண்டி போலீசாரின் உதவியுடன் வீட்டில் வைத்து பிரின்ஸ் ஜெரோமை கைது செய்தனர்.
பின்னர் அவரை நாகர்கோவிலில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது பிரின்ஸ் ஜெரோமிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் : தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 12:24:37 PM (IST)

லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 500 கிலோ குட்கா பறிமுதல் : தூத்துக்குடியில் 3பேர் சிக்கினர்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 12:16:39 PM (IST)

துனை நிலையத்தில் ரூ.1.68 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:58:22 AM (IST)

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:31:01 AM (IST)

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி : ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:21:55 AM (IST)

கனல் கண்ணன் கைது: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:32:51 AM (IST)
