» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெட்டிகடைகளில் புகையிலை விற்பனை : 2 பேர் கைது
ஞாயிறு 3, ஜூலை 2022 9:03:51 PM (IST)
கயத்தார் அருகே பெட்டிகடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் உதவி ஆய்வாளர் பவுல் மற்றும் போலீசார் நேற்று (02.07.2022) கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தார் சுங்கசாவடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் சோதனை செய்ததில், அதில் மயிலாடுதுறை மாவட்டம் கோடங்குடி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சங்கர் (50) என்பவர் தனது டீக்கடையில சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 3 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று நேற்று (02.07.2022) கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் உதவி ஆய்வாளர் காசிலிங்கம் மற்றும் போலீசார் நாகலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்ததில், அதில் அதே பகுதியை சேர்ந்த வெயிலுமுத்து மகன் வெயிலுமுத்து (35) என்பவர் தனது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 5 கிலோ 100 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
போலீசார் 2 பேரிடமிருந்தும் மொத்தம் ரூபாய் 30,000/- மதிப்புள்ள 8 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கயத்தார் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.