» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

ஞாயிறு 3, ஜூலை 2022 8:36:24 PM (IST)



கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்தும், கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளி எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்து உடனடியாக விசாரிக்க வேண்டியும், அவரது ஆட்சியில் நடைபெற்ற இமாலய ஊழல் குறித்து உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரியும், ஊழல் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கினை விரைவுபடுத்த வேண்டியும்  மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்கல்  அருகே மாநில தலைவர் இசக்கிராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாநகர தலைவர் அங்குசாமி தேவர் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட தலைவர் சங்கிலி பாண்டியன், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆதி தேவர், ஓட்டப்பிடாரம் ஒன்றிய அமைப்பாளர் ஆதிலிங்க தேவர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட சண்முகபுரம் முத்துக்குமார், உடன்குடி ஒன்றிய செயலாளர் கோபால், தூத்துக்குடி நகர பொறுப்பாளர்கள் நாகராஜ், கண்ணன் மணிகண்டன், பாண்டி, ராஜேஷ், கார்த்திக், சிவா, கருங்குளம் ஒன்றிய செயலாளர் வள்ளிநாதன், மைதீன், காசிதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் இசக்கி ராஜ் தேவர் நன்றியுரையாற்றினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory