» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மூதாட்டியை படுகொலை செய்து 3 பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஞாயிறு 3, ஜூலை 2022 1:14:23 PM (IST)
தூத்துக்குடி அருகே மூதாட்டியை படுகொலை செய்து 3 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாரைக் கிணறு அருகே உள்ள மருதன் வாழ்வு கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி இவரது மனைவி மீனாட்சி (73). அழகர்சாமி நாரைக்கிணறு கிராமத்தில் செல்போன் கடை வைத்துள்ளாராம். நேற்று காலையில் வழக்கம் போல் கடைக்கு சென்று விட்டார் மீனாட்சி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு புகுந்த மர்ம ஆசாமிகள் மீனாட்சி முகத்தில் தலையணை வைத்து அமுக்கி அவரை படுகொலை செய்துள்ளனர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இரவு வீடு திரும்பிய அழகர்சாமி மனைவி கொலை செய்யப்பட்டு கடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து நாரைக்கிணறு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் தர்மர் மற்றும் போலீசார் மீனாட்சி சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.