» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூதாட்டியை படுகொலை செய்து 3 பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஞாயிறு 3, ஜூலை 2022 1:14:23 PM (IST)

தூத்துக்குடி அருகே மூதாட்டியை படுகொலை செய்து 3 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
 
தூத்துக்குடி மாவட்டம், நாரைக் கிணறு அருகே உள்ள மருதன் வாழ்வு கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி இவரது மனைவி மீனாட்சி (73). அழகர்சாமி நாரைக்கிணறு கிராமத்தில் செல்போன் கடை வைத்துள்ளாராம். நேற்று காலையில் வழக்கம் போல் கடைக்கு சென்று விட்டார் மீனாட்சி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு புகுந்த மர்ம ஆசாமிகள் மீனாட்சி முகத்தில் தலையணை வைத்து அமுக்கி அவரை படுகொலை செய்துள்ளனர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இரவு வீடு திரும்பிய அழகர்சாமி மனைவி கொலை செய்யப்பட்டு கடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து நாரைக்கிணறு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் தர்மர் மற்றும் போலீசார் மீனாட்சி சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory