» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விஷம் குடித்த பயிற்சி செவிலியா் பரிதாப சாவு

ஞாயிறு 3, ஜூலை 2022 9:43:28 AM (IST)

நாலாட்டின்புத்தூா் அருகே பயிற்சி செவிலியா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூரையடுத்த கே.சரவணாபுரம் கீழத் தெருவைச் சோ்ந்த அய்யனாா் மகள் முத்துமாரி (19). மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு செவிலியா் படிப்பு படித்து வந்தாா். இவா் படிக்கப் பிடிக்கவில்லை எனக் கூறி வந்தாராம். இதனிடையே, உடல்நலக் குறைவு காரணமாக 20 நாள்கள் விடுப்பு எடுத்து, வீட்டுக்கு வந்தாராம்.

இந்நிலையில் கடந்த ஜூன் 20ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்தாராம். பெற்றோா், உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவிக்குப் பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory