» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமண ஆசைகாட்டி 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: போக்சோ வழக்கில் 2பேர் கைது!
சனி 2, ஜூலை 2022 10:35:54 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பாக 2பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நடராஜபுரம் 8வது தெருவைச் சேர்ந்தவர் வெயிலுமுத்து (22). சென்ட்ரிங் தொழிலாளியான இவர் 14 வயது வயது சிறுமியை அங்குள்ள கோவில் முன்பாக தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இதையறிந்த அந்த பெண்ணின் தாயார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விசாரணை நடத்தி, போக்சோ மற்றும் குழந்தைகள் திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வெயிலுமுத்துவை கைது செய்தார்.
மற்றொரு சம்பவம்
விளாத்துகுளம் அருகேயுள்ள வல்லாகுளம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்துபாண்டி (20) என்பவர் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த மாணவி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து முத்துபாண்டியை கைது செய்தார்.
மக்கள் கருத்து
பொதுஜனம்Jul 2, 2022 - 03:38:04 PM | Posted IP 162.1*****
சன் டிவி / கலைஞர் டிவி / விஜய் டிவி யில் வரும் சீரியல்களை பார்த்தால் குடும்பம் நாசமாய் போயிடும். தாய்மார்களே தயவு செய்து டிவி நாடகம் பார்க்காதீர்கள்.
NameJul 2, 2022 - 02:10:50 PM | Posted IP 162.1*****
Urupadiya kalyanam panravanuku kooda udane pulla poraka matenguthu ana intha jenmangaluku yen iPad agutho
பொதுஜனம் அவர்களேJul 2, 2022 - 07:21:57 PM | Posted IP 162.1*****