» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் கோயிலில் ஜூலை 8ல் வருஷாபிஷேகம்

சனி 2, ஜூலை 2022 8:29:58 AM (IST)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகிற 8ஆம் தேதி ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

இது குறித்து திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இம்மாதம் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமாகிறது. 

தொடா்ந்து, கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். காலை 8.30 மணிக்கு விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி அம்மனுடன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

முருகன் அடிமைJul 2, 2022 - 10:05:20 AM | Posted IP 162.1*****

திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory